Blogger news

Wednesday 31 December 2014

திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் ஜனவரி 5-ந்தேதி நடைபெறுகிறது - தினத்தந்தி



ராமநாதபுரம், டிச.29-
வைகை என்னும் பொய்யா குலக்கொடி - வேகவதி - புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி இவ்வாறு அன்று வாழ்ந்த தமிழ் புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டது வைகை ஆற்றின் முகத்துவாரமான ராமநாதபுரம். இங்கு மகுடமாக அமைந்திருப்பது திருஉத்தரகோச மங்கை திருத்தலம்.

ஆதி சிதம்பரம்

இலக்கிய சிறப்பும், இதிகாச பெருமையும் கொண்டு விளங்கும் இந்த திருஉத்தரகோசமங்கை தொல்காப்பிய காலத்துக்கு முந்தைய தொன் மை வாய்ந்தது. இந்து மதவேதங்களிலும் புராணங் களிலும் உலகில் சிவபெருமான் உறையும் முதல் திருத்தலம் இதுதான் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தகோவில் ஆதிசிதம்பரம், பூலோக கைலாயம், சிற்றம்பலம், பொன்னம்பலம் என்றெல்லாம் புகழ்ந்து போற்றப்படுகிறது.

இந்த புண்ணிய தலமான திருஉத்தரகோசமங்கை ராமநாதபுரத்தில் இருந்து தென்மேற்கே 10 மைல் தொலைவில் உள்ளது. உயர்ந்து நிற்கும் கோபுரம், மாட வீதிகள், மணிமண்டபங்கள், எழிற்கூடங்கள், நீண்ட நெடிய தாழ்வாரங்களுடன் கண்ணைக் கவரும் வகையில் காட்சி தருகிறது. மண்எட்டும் புகழ் பரப்பும், விண் எட்டும் கோபுர விமானம், கர்ப்ப கிரகம் அன்றைய தமிழர்களின் நுண்ணிய கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

பிரபஞ்சத்தின் முதல் பூபாகம்

தமிழ் வளர்த்த சமய குரவர்கள் நால்வர் களில் ஒருவரான மாணிக்க வாசகர் அவரின் தெய்வீக பாடல்களில் மண் முந்தியோ மங்கை (திரு உத்தரகோசமங்கை) முந்தியோஎன்று பழம் பாடல்களில் குறிப்பிட்டு கூறுவதில் இருந்து இந்த ஊர் பிரபஞ்சத்தின் முதல் பூபாகம் என்று உறுதிபட நம்புகிறார்கள். திருஉத்தரகோசமங்கை திருத் தலத்தின் புராண வரலாறு ஒவ்வொருவரையும் புல்லரிக்க வைக்கிறது. காலங்களை வேத காலம், இதிகாச காலம், சங்க காலம், சரித்திர காலம் என்று பிரிக்கிறார்கள். இந்த திருத்தலத்தின் வேதகால புராண நிகழ்வுகளும், இறைவனின் திருவிளையாடல்களும் இந்த உத்தரகோசமங்கை மண்ணில்தான் நடைபெற்று உள்ளது என்று இந்து சமய ஆன்மிக அறிஞர்கள் உறுதிபட நம்புகிறார்கள்.

திருஉத்தரகோசமங்கை கோவிலில் உள்ள சிவ லிங்கம் சுயம்புவாக உருவானது. ராமபிரா னின் மூதாதையர்களினால் உருவாக்கப்பட்ட இந்த கோவில் பகுதியில் முனிவர்களும், ரிஷிகளும் தங்கி இறைவனை வழிபட்டதாக கூறும் வரலாற்று நிகழ்வுகள் வேத வரிகளில் காணப்படுகிறது. இறை வழிபாட்டை துறக்காத 1000 முனிவர்கள் சிவபெருமானை துதிக்கவும், தவம் செய்யவும் இந்த இடத்தை தான் தேர்வு செய்தார்கள்.

மண்டோதரி

இந்த முனிவர்கள் திருஉத்தரகோசமங்கை தடாகத்தின் அருகே கடும் தவம் மேற்கொண் டனர். இவர்களின் தவத்தின் வலிமையை உணர்ந்த சிவ பெருமான் அசரீரியாக சொன் னார். தவசேஷ்டர்களே பெண்ணின் நல்லாள், மண்ணு புகழ் மண்டோதரி என்னை (சிவன்) பாலக வடிவில் காண இலங்கையில் கடும் தவம் புரிந்து வருகிறாள். அவளுக்கு காட்சியளித்து விட்டு திரும்பி வருகிறேன். இதற்கிடையே மண்டோதரியின் கணவன் இலங்கை அரசன் ராவணன் என் உடலை தீண்டினால் அப் போது இந்த தடாகத்தில் அக்னி ஜுவாலை பற்றி எரியும். இவ்வாறு அசரீரி ஒலித்தது.

தவத்தில் திளைத்திருந்த மண்டோதரி சிவனை பாலகனாக காண விரும்பியதால் மண்டோதரி முன்பு ஆதிசிவன் முத்துமணி பல்லக்காக முளைத் தெழுந்த சிறுகீரையாக தத்துங்கிளி போல் தோன்றி னார். பலவண்ண பாலகன் தத்தி, தத்தி நடந்து செல்வதை கண்டு மண்டோதரி உள்ளத்தில் உவ கை பொங்கியது. சிறுவனின் வண்ண வடிவழகில் எண்ணத்தை பறிகொடுத்து சிலையாக நின்றாள். அப்போது அங்கு வந்த ராவணன் குழந்தையின் அழகில் உள்ளத்தை பறிகொடுத்து வாரி அணைத்து மகிழ்ந்தான். அப்போது அதே நேரத்தில் உத்தர கோசமங்கை தடாகத்தில் அக்னி ஜோதி எழுந்தது. முனிவர்கள் இந்த ஜோதியில் கலந்தார்கள்.

மாணிக்கவாசகர்

1000-ம் முனிவர்களில் ஒருவர் மட்டும் அக்னி குழம்பில் விழாமல் ஆகம வரிகளை கற்றுணர்ந்த வண்ணமாக இருந்தார். அவர் தான் பின்னாளில் மாணிக்கவாசகராக அவதரித்து திருஉத்தரகோச மங்கை தலத்தில் நாளெல்லாம் பரமனை பாடி பரவசமடைந்தார் என்று புராணங்களில் கூறப்படு கிறது. மாணிக்கவாசகர் அவரின் திருவாசக திரு மறையில் 38 இடங்களில் திருஉத்தரகோசமங் கையை பாடி அங்கு உறையும் இறைவனையும், இறைவியையும் வணங்கிஉள்ளார். ஆதி காலத்தில் எப்படி தன்னை காண கடும் தவம் மேற்கொண்டு அக்னி ஜுவாலையில் ஐக்கியமான 999 முனிவர்க ளும் இறைவனோடு கலந்தார்களோ அதேபோல மாணிக்கவாசகரையும் இறைவன் ஆட்கொண்டார்.

இலங்கையில் இருந்து திரும்பி வந்த சிவன் அக்னியில் கலந்த அனைத்து சீடர்களையும் எழுப்பி அவர்களுக்கு சிறப்பு செய்ய அவர்களோடு ஐக்கிய மாகி திருஉத்தரகோசமங்கையில் சகஸ்ரலிங்கமாக (1008 லிங்கம்) காட்சி தருகிறார் என்று புராணங்க ளில் கூறப்படுகிறது. இவ்வளவு புராண புகழ் பெற்ற இந்த கோவிலின் தல விருட்சம் இலந்தை மரம். காலங்கள் கடந்த இந்த மரம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

அபூர்வ மரகத சிலை

இந்த கோவிலின் நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகத கல்லினால் ஆன ஆளுயர ஆடும் திருக்கோலத்தில் உள்ள விலை மதிக்க முடியாத அபூர்வ நடராஜர் சிலை உள்ளது. தமிழர்களின் கலைத்திறனுக்கும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுக்கும், கட்டி யம் கூறும் வகையில் கண்கவர் காட்சியளிக்கும் அபூர்வ சிலை இது. ஒளி வெள்ளத்தில் சிலையை உற்றுப்பார்த்தால் சிலை உயிரோடு உள்ளது போல தோன்றும். உடலில் பச்சை நரம்புகள் எப்படி கண்ணுக்கு தெரிகிறதோ, அப்படி அந்த சிலையிலும் தெரிகின்றன.

நவரத்தினங்களில் ஒன்றான பச்சை கல் இயல் பாகவே மென்மையானது. ஒளி, ஒலி அதிர்வுகளை தாங்க முடியாத தன்மை உடையது. இதன் காரண மாக மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்று சொல்வார்கள். எனவே இந்த நடராஜர் சிலையை ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து அந்த சிலை முழுவதும் சந்தன கலவையை பூசி பாதுகாத்து வருகிறார்கள். வருடத்தில் ஒருநாள் அதுவும் சிவ னுக்கு உகந்த நாளான திருவாதிரை நாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத் திற்காக சந்தன கவசம் களையப்படும்.

ஜனவரி 5-ந்தேதி

இதன்படிவருகிற 4-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் மரகத நடராஜரின் பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்படுகிறது. இதைத் தொடர்ந்து இரவு வரை நடராஜருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை கள் நடைபெறும். இரவு 10 மணிக்கு ஆருத்ரா அபிஷேகம் நடக்கிறது. 5-ந்தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. பின்னர் நடராஜர் மீது மீண்டும் சந்தனம் பூசப்பட்டு தீபாராதனை நடைபெறும். விழாவையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். விழா ஏற்பாடுகளை ராணி பிரம்ம கிருஷ்ண ராஜேசுவரி உத்தரவின் பேரில் திவான் மகேந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி தலைவர் நாகராஜன் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

Saturday 27 December 2014

தொட்டால் மனம் மலரும்! By தஞ்சாவூர்க்கவிராயர்

உலகிலேயே உணர்வுகளின் அடிப்படையில் உயிர்களை வகைப்படுத்தியது தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம் மட்டுமே. "உற்றறிவதுவே ஓரறிவுயிரே' என்கிறது தொல்காப்பியம். அதாவது, ஓர் அறிவு உயிருக்கு தொடுதல் உணர்வு மட்டுமே உண்டு.

ஆகவே, ஓர் அறிவு உயிர்களான மரம் செடி கொடிகளோடு உரையாட வேண்டுமெனில் அவற்றைத் தொட்டுத்தான் பேச வேண்டும். மரங்களைத் தொட்டுத் தழுவி நோய் நீக்குவதை ஒரு சிகிச்சை முறையாகவே சித்த மருத்துவம் கூறுகிறது. 

மேலை நாடுகளில் தொடு சிகிச்சை  உடல் மற்றும் மனச் சிக்கல்களுக்கான மருத்துவ முறையாக வளர்ந்துள்ளது. மியாமி பல்கலைக்கழகத்தில் தொடுகை ஆராய்ச்சி நிறுவனம் இது குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

கேட்கும் திறனும் கண் பார்வையும் பிறவியிலேயே இல்லாத ஹெலன் கெல்லர் தொட்டுத் தொட்டுத்தான் எழுத்துக்களை வாசித்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை தொட்டால் மலரும் பூக்களாக சொற்கள் இருந்திருக்கின்றன.

சின்னஞ்சிறு இலைகளை விரித்தபடி நிற்கும் செடி ஒன்று - நம் விரல்கள் தொட்டமாத்திரத்தில் அதன் இலைகள் மடங்கி மூடிக் கொள்கின்றன. இந்தச் செடிக்கு "தொட்டாற்சிணுங்கி' என்று பெயர் வைத்தவன் ஒரு கவிஞனாகத்தான் இருக்க முடியும்.

தூரத்தில் தரையைத் தொடுவதுபோல் தோற்றம் தரும் தொடவே முடியாத வானத்தின் பெயர் "தொடுவானம்'! இதுவும் அழகான சொல்லாட்சிதானே?

நமது இரண்டு கன்னங்களையும் தொட்டுத் தடவி திருஷ்டி கழிக்கும் அம்மாவின் தொடுகைக்கு இணையான ஆசீர்வாதத்தை எந்த மகானால் தந்துவிட முடியும்?

மகாபாரதத்தில் திருதிராட்டிரன் மனைவி காந்தாரி துரியோதனின் உடம்பெல்லாம் தொட்டுத் தடவினால் அவனை யாராலும் கொல்ல முடியாது. கண்ணிரண்டையும் கறுப்புத் துணியால் கட்டியிருக்கும் காந்தாரிக்கு மகன் இடுப்பின் கீழ் அணிந்திருந்த ஆடை தெரியவில்லை. அவளால் தொடமுடியாத அந்த தொடைப் பகுதியை கிருஷ்ணன் சைகை காட்ட பீமன் அடித்து வீழ்த்தியதாக கதை உண்டு. அன்னையின் தொடுகை எத்துணை ஆற்றல் மிக்கது என்பதை இது உணர்த்துகிறது.

இராமாயணத்தில் இராமபிரான் இலங்கைக்கு பாலம் அமைப்பதில் உதவிய அணிலின் கதை நாம் அறிந்ததுதான். இராமபிரான் அணிலை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்ததுதான் அதன் முதுகில் உள்ள மூன்று கோடுகள் என்று சொல்வது உண்டு. 

அநுமன் கடலைத் தாண்டி இருக்கலாம். ஆனால் அன்பு தலைமுறைகளைத் தாண்டக் கூடியது என்பதே இக்கதையின் செய்தி.

கணவன் மீது கோபம் கொண்டபோது, "என்னைத் தொடக்கூடாது' என்று கட்டளையிட்டாள் திருநீலகண்டரின் மனைவி என்பது ஒரு கதை.

ஏழைத் தாய் குழந்தைக்குச் சோறூட்டுகிறாள். தொட்டுக் கொள்ள காக்கையும் குருவியும்! இதில் உள்ள கவித்துவச் சிந்தனை ஒருபுறமிருக்க சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள துணைக் கறியாக உள்ள பதார்த்தங்களை "தொட்டுக்கை' என்று குறிப்பிடும் சொல் மரபு உண்டு.

பல ஆண்டுகளுக்கு முன்னால் நானும் என் நண்பரும் சேர்ந்தே அலுவலகம் செல்வோம். தினமும் புறப்படும்போது உள்ளே போய் கட்டிலில் உட்கார்ந்திருக்கும் அப்பாவின் தோளைத் தொட்டு "போயிட்டு வரேம்ப்பா' என்று சொல்லிவிட்டு வருவார். எவ்வளவு அவசரமானாலும் அப்பாவைத் தொடாமல் வரமாட்டார்.

அப்போது அந்த முதியவர் முகத்தில் பரவும் திருப்தியையும் ஆனந்தத்தையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். ஒரு தொடுகைக்காக முதியவர்கள் ஏங்குகிறார்கள் என்பதை நாம் அறிவோமா?

உடம்பெல்லாம் புண்ணும் சீழுமாய், சாலையோரம் விடப்பட்ட தொழுநோயாளிகளைத் தொட்டுத் தூக்கி அவர்கள் உடம்பைத் துடைத்து பணிவிடை செய்து பாதுகாத்ததால் அன்னை தெரசாவை புனிதர் நிலைக்கு உயர்த்தி வணங்க வைத்தது வாட்டிகன்!

குழந்தைகள் நம்மைத் தொடும்போது ஏற்படும் பரவச உணர்வை "இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் மெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும் மயக்குறு மக்கள் இல்லோர்க்கு பயக்குறைவில்லை தாம் வாழும் நாளே...' என்று புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. "மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்' என்கிறார் திருவள்ளுவர்.

குழந்தைகளை தாய்மார்கள் அடிக்கடி தொடுவதால் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் கூடுதலாக சுரப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே நோயாளிகளைத் தொட்டு உரையாடும்போது அவர்களுக்கு நோயின் தாக்கம் பெரிதும் குறைவதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.

பாரதி கடவுளை கண்களால் காண மட்டும் விரும்பவில்லை. விரலால் தீண்டவும் விரும்பினான். அதனால்தான் "தீக்குள் விரலை வைத்தால், உனைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா' என்று பாடினான்.

சிறுவயதில் வீடுகளில் ஏற்றப்படும் குத்துவிளக்கின் சுடருக்குள் விரல் நீட்டும் விளையாட்டு நினைவுக்கு வருகிறதா? அந்தச் சுடருக்குள் நுழையும் விரலை தீ செல்லமாகச் சுடும். அதுதான் கடவுள் என்று குதூகலித்து கைகொட்டிச் சிரிக்கிறான் பாரதி குழந்தை போலே!

அண்மையில் ஒரு பிரம்மாண்ட அணுவெடிப்புச் சோதனை முடிவில் கடவுள் துகளைக் கண்டுபிடித்து விட்டதாக (எர்க்ள் ல்ஹழ்ற்ண்ஸ்ரீப்ங்) விஞ்ஞானிகள் அறிவித்தபோது கடவுளை ஏறத்தாழ தொட்டுவிட்டதாகவே அறிவுலகம் பெருமைப்பட்டுக் கொண்டது.

வானத்தில் கோடிக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணிக்கும் விண்கல விரல்களால் பிரபஞ்சம் எங்கும் கடவுளைத் தேடித் துழாவ ஆரம்பித்து விட்டான் மனிதன். பாவம் அவன் படுத்திருப்பது கடவுளின் மடி என்று அறிந்தானில்லை.

தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமென்று ஆசைப்பட மைதாஸின் கதையை மறக்க முடியுமா? உண்ணும் உணவும் ஆசை மகளும் கூட தான் தொட்டதனால் பொன்னாகிப் போனதும்தான் அவனுக்குப் புத்தி வந்தது!

பேராசிரியர் மாக்ஸ்முல்லர் இந்திய ஆன்மிக குரு ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகையில் தங்கத்தாலோ பிற உலோகங்களாலோ ஆன நாணயங்களையோ ஆபரணங்களையோ தொட்டாலே அவர் கைகள் நடுங்க ஆரம்பித்துவிடும் என்று குறிப்பிடுகிறார். அந்த ஆன்மிக குருதான் ராமகிருஷ்ண பரமஹம்சர்!

விரல் என்பது மனதின் பெளதிக வடிவம். மனத்தின் நீட்சி. விரல் தொடும் முன்னதாகவே மனம் தொட்டு விடுகிறது. "இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்' என்கிறான் கம்பனின் ராமன்.

ஏதோ காரணத்தால் உறவினர் ஒருவருடன் பல வருடங்கள் பேசாமலே இருந்து இருவரும் எங்கு சந்தித்தாலும் ஒருவித பகைமை உணர்வாகவே அது வளர்ந்துவிட்டதாக ஒரு நண்பர் சொன்னார்.

பிறகு ஏதோ சந்தர்ப்பத்தில் அந்த நண்பரின் கையைப் பிடித்து எப்படி இருக்கீங்க என்று நண்பர் கேட்ட மாத்திரத்தில் அவர் நெகிழ்ந்து விட்டாராம். கை தொட்ட ஒரு நொடியில் பகைமைச் சுவர் சுக்குநூறாகி இதயங்களை இணைத்துவிட்டது.

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மனசுக்குள் தமது அன்புக்குரியவர் தன்னைத் தொட வேண்டும் என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. 

தொடுங்கள். தழுவிக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களோடு உடலளவில் நெருங்கி இருங்கள். அங்கே புரிதல் இயல்பாகி விடும். வார்த்தைகளே தேவை இல்லாத வாத்சல்யம் உறவுகளுக்கு உயிர் தருகிறது.

பாலியல் சீண்டல்கள் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில் எதிர்பாலினத்தவர் ஒருவருக்கு ஒருவர் சாதாரணமாகத் தொடவே அஞ்சும் நிலைதான் உள்ளது.

அந்தக் காலத்து திரைப்படங்களில் காதல் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். காதலன் காதலியைத் தொடுவது அபூர்வமாகவே இருக்கும். அப்படித் தொட்டாலும் அதில் விரசம் இருக்காது. 

"அப்பா என்னை சம்பூர்ண ராமாயணம் படத்துக்கு மட்டுமே அழைத்துச் செல்வார்' என்று என் மனைவி பரிதாபமாகச் சொல்வதைக் கேட்டு குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

திரைப்படங்களில் வெளிப்படுத்தப்பட்ட ஒழுக்கம் சமூக உணர்வுகளிலும் வேரோடி இருந்தது. அந்தக் காலத்தில் பொது இடங்களில் ஆண்கள் - கணவனாகவே இருந்தாலும் - தங்களைத் தொட்டுப் பேசுவதை பெண்கள் அனுமதிப்பது கிடையாது. அது ஒருவித பண்பாட்டுச் சீர்மை. படித்தவர்களைவிட பாமரர்களே இதனைத் தீவிரமாகப் பின்பற்றினர்.

ஆனால், இன்று மெத்தப் படித்த மேதாவிகள் கேரளாவிலும், தமிழக ஐ.ஐ.டி. வளாகத்திலும் "இளமைத் திருவிழா' என்ற பெயரில் அரங்கேற்றிய வக்கிரக் காட்சிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் காண்பிக்கப்பட்டபோது அது விரசத்தின் உச்சமாக இருந்தது. 

தொடுதலும், தழுவுதலும், முத்தமிடுதலும் பொது இடத்தில் இளமையின் சுதந்திரமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று இளைஞர்களில் ஒரு சாரார் முழக்கமிடுகின்றனர்.

தொடுதலின் வண்ணங்கள் திசைமாறுகின்றன.

மண்ணின் மணம் காப்போம்; மானத்தையும்தான்!

சிரிக்க மறந்த கதை By பா. ராஜா

இது அவசர உலகம். காலையில் எழுந்து பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அலுவலகத்துக்கோ செல்வதில் இருந்து, மாலையிலோ இரவிலோ வீடு திரும்பும் வரை டென்ஷன்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. 

கவலையின் அளவு வேண்டுமானால் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனால், எல்லாருமே பிரச்னைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டு சிரிக்க மறந்து நாள்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை.

இதில், கிராமத்தில் வசிப்போர், நகரத்தில் வசிப்போர் என்ற பாகுபாடு கிடையாது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு கிடையாது. 

சென்னை போன்ற நகரங்களில் மின்சார ரயிலில் தினந்தோறும் 30 கிலோமீட்டர் பயணிக்கும் ஒரு பயணி, அருகில் அமர்ந்திருப்போரிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் சிந்தனையிலேயே அமர்ந்திருப்பார். 

தான் தினமும் கடந்து செல்லும் பாதையில் பிரபல உணவகம் ஒன்று அமைந்திருக்கும். ஆனால், அதைப் பற்றி அவருக்கு சுத்தமாகத் தெரிந்தே இருக்காது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப் பருவ மாணவர்கள் கபடி, கிட்டிப்புள்ளு, நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம் என பல்வேறு விளையாட்டுக்களை விளையாடுவார்கள். எப்போது பள்ளி முடியும், விளையாடச் செல்லலாம் என்ற முனைப்பில் இருப்பர். 

இன்று அப்படியல்ல. விடியோ விளையாட்டுகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுமே முக்கியப் பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து அவர்களாகவே சிரித்துக் கொள்வதைத்தான் காண முடிகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதே அரிதான விஷயமாக உள்ளது.

"மனம் விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு' என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அந்தளவுக்கு வாழ்க்கை வெறுமையாகி விட்டது என நாம் நினைக்கிறோம். 

வேறு சிலருக்கோ, "சே, என்னடா வாழ்க்கை இது' என்ற சலிப்பு. வயது முதிர்ந்தவர்கள் இவ்வாறு கூறலாம். ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரே இவ்வாறு கூறுவது மிகவும் கவலையளிக்கிறது.  

பிரச்னையையே வாழ்க்கையாக எதிர்கொள்ளும் இளைஞன், நாளடைவில் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாகிறான். அது அவனது எதிர்காலத்தையே பாழாக்குகிறது. 

சிரிப்பை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஏதாவது ஒரு விஷயத்தை மனதில்போட்டு குழப்பிக் கொள்கிறோம். சிரிப்பைத் துரத்தியடிக்கும் ஓர் ஆயுதமாக கவலை நம்முன் நிற்கிறது. 

கவலைகளை மறப்பதற்கு இன்று பலரும் பல்வேறு வழிகளை நாடத் தொடங்கியுள்ளனர். அதில் ஒன்று யோகக் கலை. யோகக் கலையில் பல்வேறு ஆசனங்களைச் செய்வதன் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது. 

அதுபோல, தொடர்ந்து சில நிமிடங்கள் சிரிப்பதன் மூலம் மனசு லேசாகிறது. யோகா வகுப்புகளில் இது ஒரு பாடமாகவும் கற்றுத் தரப்படுகிறது. 

கவலைகளை மறப்பதற்காகவே ஒவ்வொரு நகரத்திலும் தற்போது நகைச்சுவை மன்றங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த மன்ற உறுப்பினர்கள் வாரத்தில் ஒருநாள் கூடி, தங்கள் கவலையை மறந்து, சிரிப்பு மூட்டும் செய்திகளைக் கூறி மகிழ்கின்றனர்.

சிரிப்பு என்பது மனித குணநலன்களின் ஒன்று. சிரிப்பை நிர்ணயிப்பது மூளை. ஒரு குழந்தை பேசத் தொடங்குவதற்கு முன் சிரிக்கத் தொடங்குகிறது. சராசரியாக ஒரு குழந்தை நாளொன்றுக்கு 300லிருந்து 400 முறை வரை சிரிக்கிறது. ஆனால், சராசரி மனிதன் நாளொன்றுக்கு 15 முதல் 20 முறைதான் சிரிக்கிறான். 

நமது மனத்துக்குள் எழும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது சிரிப்பு. மனிதர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். ஆனால், சிரிப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது.

சிரிப்பில் பல வகைகள் உள்ளன. புன் சிரிப்பு, அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு இப்படி. சிரிப்பு ஒருவரின் மனத்தையும், உடலையும் வலிமைப்படுத்தி, அவரைப் புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

"நைட்ரஸ் ஆக்ûஸடு' என்ற ஒரு வேதிப்பொருளுக்கு "லாஃபிங் கேஸ்' (சிரிப்பு வாயு) என்று பெயர். இது ஒரு நிறமற்ற வாயு. மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மருந்துகள் கைகொடுக்காத நிலையில், இந்த வாயு ஓர் அருமருந்தாக விளங்குகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

அதாவது, மன அழுத்தத்துக்கு உள்ளானோருக்கு சிறந்த மருந்தாக விளங்குவது சிரிப்பு என்று தெரிவிக்கின்றனர். 

"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்பது உண்மைதான். ஆனால், அதற்கு முன்பு நமது சிரிப்பில் நாம் நம்மைக் காண்போமே!

காலம் போற்றும் காலம் வருமா? By அ. அறிவுநம்பி

மனிதர்களிடம் நிறைகளும் உண்டு, குறைகளும் உண்டு. குறைகளை நீக்கி அவற்றை நிறைகளாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளும் மனிதர்களிடையே உண்டு. ஆனால், மறுதலையாக நல்ல பல நிறைகளையும் குறைபாடுகளாக மாற்றிக் கொள்வதே நடப்பியல்.
வள்ளுவர் வழங்கிய,

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமையானும் கெடும்

என்ற வைரவரிகளை மறந்துபோய்விட்டோம் என்பதே உண்மை.
பொதுவாக மனிதர்களிடமும் குறிப்பாகத் தமிழர்களிடமும் காணப்பெறும் பெருங்குறை நேரம் போற்றாமை என்பதே. எந்தவிதமான அக்கறையும் காட்டாமல் ஏனோதானோ என மக்கள் நேரங்கடத்துவதை அன்றாடம் காணமுடிகின்றது. 

பருவத்தே பயிர்செய், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பன போன்ற மரபுச் சொல்லாடல்கள் ஏட்டில் மட்டுமே தென்படுகின்றன. ஒரு சாதாரண நிகழ்ச்சியைக்கூட உரிய நேரத்தில் தொடங்கி உரிய நேரத்தில் முடிப்பது என்பது முயற்கொம்பாகிப் போனது. 

கூட்டம் மாலை ஆறுமணிக்கு ஆரம்பம் என அழைப்பிதழில் இருக்கும். ஏழுமணிக்குமேல்தான் நிகழ்வு தொடங்கும். "பார்வையாளர்கள் உரிய நேரத்திற்கு வருவதில்லை' என்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வாதம். "ஆறுமணிக்கு என்று சொல்வார்கள் ஏழுமணிக்குத்தான் தொடங்குவார்கள்' என்பது பார்வையாளர் தரப்பு வாதம். 

தென்தமிழகத்தில் தொடர் சொற்பொழிவாற்றிவிட்டு ஊர் திரும்பிய ஒரு சொற்பொழிவாளர் கூறிய செய்திகளை இங்கே பரிமாறுவது நலந்தரும். அந்தச் சொற்பொழிவாளர் அமைப்பாளர்களிடம், "ஆறுமணிக்கு நிகழ்ச்சி எனப்போட்டால் ஏழுமணிக்குத்தான் வருகிறார்கள் எனக் கூறுகிறீர்களே நிகழ்ச்சி ஐந்துமணிக்கு என அச்சிட்டால் ஆறுமணிக்கு மக்கள் வந்துவிடுவார்களே' எனக் கேட்டுள்ளார். "அப்படியில்லை அவர்கள் அப்படிப் போட்டாலும் ஏழுமணிக்குத்தான் வருவார்கள்' என்று ஒருங்கிணைப்பாளர் விடை தந்துள்ளார். 

எவ்வாறாயினும் அழைப்பிதழில் குறிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் எந்த ஒரு அரங்கமும் செயல்படவில்லை என்பதே பெறப்படும் முடிவாகிறது.
அரங்கமே காலியாக இருந்தாலும், தலைமை தாங்குபவர் வரவில்லை என்றாலும் சொன்ன நேரத்துக்கு நிகழ்ச்சியைத் தொடங்கி நடத்திக்காட்டியவர் கம்பனடிப்பொடி சா.கணேசன். 

ஒலிபெருக்கிமுன் நின்று "கம்பன் வாழ்க' என முழக்கமிட்டுவிட்டு, "இன்றைய காலை நிகழ்ச்சி சரியாக இன்னும் பதினான்கரை நிமிடத்தில் தொடங்கும்' என்பார். 

பதினான்கு என்று குறைத்தோ பதினைந்து என அரைநிமிடம் நீட்டித்துக் கொண்டோ அவ்வறிவிப்பு இருக்காது. சிறிது நேரங்கழித்து மீண்டும் அவர் ஒலிபெருக்கிமுன் நிற்கும்போது மிகச்சரியாக பதினான்கரை மணித்துளிகள் பறந்திருக்கும். 

இன்றைக்கும் இந்த முறைமையினைப் புதுவை, சென்னை, கோவை, மதுரை போன்ற கம்பன் கழகங்களும், வேறுசில அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன. அவர்கள் மிகச்சரியாகத் தொடங்கிவிடுவார்கள் என்ற பயமும், சிந்தனையும் சேரப் பார்வையாளர்கள் சரியான காலத்தில் அரங்கில் இருப்பர். 

இப்படிப் பழக்கப்படுத்தாமைதான் பலமேடைகளை நாசப்படுத்தி, எல்லாத் தரப்பு மக்களையும் தொல்லைப்படுத்துகிறது.

நிமிடக் கணக்கில் துல்லியம் காட்டும் இடங்கள் பல உள்ளன. வானொலியில் ஒருவர் உரைக்கான நேர அளவு பதின்மூன்று மணித்துளிகள் என்றால் அந்த அளவை அவர் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருமணித்துளிகூடக் கூட்டிக் கொள்ள முடியாது, கூடாது. அங்கேதான் காலம் பொன் போன்றது என்ற தொடரின் முழுமைப்பாட்டைக் காணமுடியும். 

ஆனால், பொதுமேடையில் ஒரு கட்டுப்பாடு காணப்பெறவில்லை என்பது பேருண்மை. வரவேற்புரையையே ஒருவர் ஒருமணிநேரம் பேசியமரும் மேடைகளும் உண்டு. அடுத்தவரின் நேரத்தைக் களவாடுகிறோம் என்ற உணர்ச்சி பலரிடம் இருப்பதில்லை.

இந்தச் சிக்கலை வெளிநாட்டினர் வெகுஎளிதாக வெல்கின்றனர். மேடையைப் பகிர்பவர்களுக்கான நேரத்தை நொடியளவில்கூடப் பட்டியலிட்டுத் தந்துவிடுகின்றனர். அறிமுகவுரைக்கு ஏழு நிமிடங்கள் எனக்குறிப்பிட்டு அடைப்புக்குறிக்குள் 10.03 முதல் 10.10 வரை எனச் சுட்டிக்காட்டியிருப்பர். 

மணித்துளி நிகழ்முறை (ம்ண்ய்ன்ற்ங் ற்ர் ம்ண்ய்ன்ற்ங் ல்ழ்ர்ஞ்ழ்ஹம்ம்ங்க்) என்பது அவர்களைச் செப்பமுடைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்துகொள்ள வாய்ப்பு நல்குகின்றது. ஏழுநிமிட நேரம் தரப்பட்ட உரை எட்டு நிமிடங்களாகப் போனால்கூட அதனை அநாகரிகமென்று கருதுகின்றனர். 

நேரம் என்பது நம்கையில்தான் உள்ளது. உள்ளத்தில் உரிய விழிப்பு வருமானால் தேவைப்படும் நேரச்சுருக்கமும் தாமாகவே விளையும். ஒரு பதச்சோறாக ஒரு நிகழ்வை இங்கே பதிவு செய்யலாம். 

படைப்பாளரும், மதிப்பீட்டாளருமான க.நா. சுப்பிரமணியம் புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் சிலகாலம் வருகைதரு பேராசிரியராகப் (ஸ்ண்ள்ண்ற்ண்ய்ஞ் ல்ழ்ர்ச்ங்ள்ள்ர்ழ்) பணிபுரிந்தார். 

ஒருநாள் மாலை, என்னிடம் சிலப்பதிகாரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் ஒன்றைக் கொடுத்தபடி "இன்னும் ஒரு வாரத்தில் படித்துவிட்டுத் திருப்பித் தந்துவிடுவீர்களா' எனக் கேட்டார். சரியென்று தலையாட்டினேன். 

ஒருவாரம் கழிந்தபின் "படித்து முடித்துவிட்டீர்களா' என்று அவர் கேட்க, "படிக்க நேரமில்லாதுபோனது. சீக்கிரம் முடித்துவிடுவேன்' எனப் பதில் கூறினேன். 

அரைமணி நேரங்கழிந்தபின் "காலைலே எத்தனை மணிக்கு எந்திரிப்பீங்க' என்றார். "ஆறுமணிக்கெல்லாம் எந்திரிச்சிடுவேன்' என்பது என் பதில். "ஒண்ணு செய்ங்களேன் நாளைலேயிருந்து அஞ்சுமணிக்கு எந்திரிங்க. ஒரு நாலே நாள் தெனமும் கூடுதலா ஒரு மணிநேரம் கெடைக்கும் நாலு நாளைக்கு நாலு மணிநேரம் புத்தகத்தைப் படிச்சிடலாம்' என மெதுவாக அவர் கூறியபோது மயிலிறகால் நீவுவதுபோல் மெல்லிய அதிர்வு என்னுள் ஏற்பட்டது. ஆனால் வலித்தது.
மூன்றாம் நாளே அவரிடம் நூலைத் தந்தேன். "என்ன கோவமா? ஒடனே திருப்பித் தர்ரீங்க படிச்சீங்களா இல்லியா' எனப் பேசமுற்பட்ட அவரை இடைமறித்தேன். "ஆறுமணிக்குப் பதிலாக ஐந்து மணிக்கு எழுந்தால் கூடுதலாக ஒருமணிநேரம் கிடைக்கும் என நீங்கள்தானே சொன்னீர்கள். நான் நான்கு மணிக்கே எழுந்து படிக்க ஆரம்பித்தேன். இரண்டுமணி நேரம் மிகுதியாகக் கிடைத்தது. அதனால், நான்கு நாளுக்குப் பதில் இரண்டு நாளிலேயே நூலை முடித்துவிட்டேன். வேண்டுமானால் எந்தப் பக்கத்திலிருந்தும் கேள்வி கேட்டுப் பாருங்கள்' என்றேன் மிடுக்கோடு.
ஒற்றை விரலால் தட்டச்சுச் செய்து கொண்டிருந்த அவர் எழுந்து வந்து என்னைக் கைகுலுக்கிப் பாராட்டியது இன்றும் பசுமையாக உளது. இந்நிகழ்வு உணர்த்துவது ஒன்றைத்தான். நேரம் என்பது வெளியிலிருந்து வாங்கப்படுவதில்லை. நெஞ்சம் விழைந்தால் நேரம் நம் கைவசப்படும் என்பதுதான் அது.

நேரத்தில் கவனம் செலுத்தியவர்கள் நிறையவே பணிபுரிந்துள்ளனர். மு. வரதராசனாரைப் பற்றிப் பேசிய பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்ட செய்தி கவனத்துக்குரியது. 

அந்த ஆண்டு பயிலவந்த மாணவர்களுக்கான முதல் வகுப்புக்குள் மு.வ. நுழைவாராம். வகுப்பைத் தொடங்கியதும் கால அட்டவணையில் 10 மணிமுதல் 11 மணிவரை மு.வ.வின் வகுப்பு என்று போடப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். பத்துமணி ஒருநிமிடம் ஆகியும் மு. வ. வகுப்பிற்குள் வரவில்லை என்றால் இரண்டு காரணங்கள்தான் இருக்கும். ஒன்று மு.வ. ஊரில் இல்லை இல்லையேல் மு.வ. உயிருடன் இல்லை என்பதுதான் காணமாகும். 

கண்டிப்பும் நேர்மையும் உறவாடப் பேசிய இவர்போல இன்று எத்தனைபேரைச் சுட்டிக்காட்ட இயலும்?

அண்மையில் இலண்டனுக்குப் போனபோது கிரீன்விச் பகுதிக்குப் போகத் தொடர் வண்டியில் ஏறினோம். 10.17 மணிக்கு வண்டி புறப்படும் என அறிவிப்புப் பலகையும், ஒலிபெருக்கியும் கூறின. துல்லியாக அதே நேரம் வண்டி புறப்பட்டபோது எனக்கெதிரே அமர்ந்திருந்த ஒரு பெண்மணி தன் கைக்கடிகாரத்தை 10.17 எனத் திருத்தி வைத்துக் கொண்டார். 

அரைநொடிகூடத் தாமதம் செய்யாமல் பல நிறுத்தங்களில் நின்று புறப்பட்டும் வண்டி சென்று கொண்டிருந்தது. என்னை அழைத்துக் கொண்டு போவதற்காக மான்செட்டரில் இருந்து வந்திருந்த என்தம்பி மகனிடம் ஓட்டுநரைப் பாராட்ட வேண்டும் என்றேன். பகபகவென்று சிரித்த அவன் இந்தத் தொடர்வண்டியை மனிதர்கள் ஓட்டுவதில்லை மின்காந்த நுட்பத்துடன் ஓட்டுநரின்றியே இவை இயங்கும் என்றபோது நாணமேற்பட்டது. 

எந்திரங்கள் இயக்கினாலும் பயணிகள் மனிதர்கள்தாமே? மிகச்சரியாக ஏறி, இறங்கி அவர்கள் செயல்படுவதில் சிக்கலேதும் ஏற்படவில்லையே என்ற உணர்வு வந்தது. 

நம் நாட்டில் மிகச்சரியாக நேரத்தில் ஒரு தொடர்வண்டி நிலையத்துக்குள் வந்தபோது இது நேற்றைக்கு இதே நேரம் வரவேண்டிய வண்டி என நகைச்சுவைக்காகக் கூறுவர் ஆனால், அப்படித்தானே நிகழவும் செய்கிறது. 

தேர்வறைக்குள் தேர்வுநேரம் தொடங்கி அரைமணிநேரமாகிவிட்டால் தேர்வெழுத எவரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. அங்கே மட்டும் சரியான நேரத்தில் பங்காற்ற முடிகிறதே. 

அது மாதிரியான கட்டுப்பாட்டை மனமே வரித்துக்கொண்டால் எந்த இடத்திலும் நேரம் பாழாவதில்லை!

கட்டுரையாளர்: பேராசிரியர், மையப் பல்கலைக்கழகம், புதுச்சேரி.

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) நடத்தி வரும் தேர்வு முறையை ஆன்லைனில் நடத்த பரிந்துரை: 10 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்க அரசுத் துறைகளுக்கு உத்தரவு

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தி வரும் தேர்வு முறையை "ஆன்லைனில் நடத்துவது' உள்பட, நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து 10 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என அனைத்து அரசுத் துறைகளுக்கும் மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, எஸ்எஸ்சி தேர்வு முறையை மேம்படுத்துவது தொடர்பாக மத்தியப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர் ஐ.எம்.ஜி. கான் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் நியமித்தது. இக்குழு பல்வேறு நிலைகளில் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது.

நிபுணர் குழு பரிந்துரைகள்: தேசிய அளவிலான தேர்வு, அதில் தொழில்நுட்ப ரீதியாக எதிர்கொள்ளப்படும் பிரச்னைகள், எஸ்எஸ்சி தேர்வு தொடர்பான விழிப்புணர்வு, மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) பணிகளுக்கான தேர்வு முறைகள் ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து நிபுணர் குழு, அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது.

மத்திய ஆயுதப் படைகள் தேர்வுக்கான "செயல் நடவடிக்கை குழு' ஏற்கெனவே அளித்திருந்த பரிந்துரைப்படி, +2 கல்வித் தகுதிக்கு கீழான கல்வித் தகுதிக்கான பணியிடங்களை எஸ்எஸ்சி நடத்தக் கூடாது என்று கூறியிருந்தது. அதை ஐ.எம்.ஜி. கான் தலைமையிலான குழு ஏற்றுக் கொண்டது.

மேலும், "மத்திய உள்துறை ஒப்புதல் தெரிவித்தால், காவலர் போன்ற பணியிடங்களுக்கான தேர்வை மத்திய ஆயுதப் படையே நேரடியாக நடத்திக் கொள்ளலாம். மத்திய உள்துறை ஒப்புதல் தெரிவிக்காவிட்டால், நக்சல், தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் மாவட்டங்கள் நீங்கலாக, பிற பகுதிகளில் "ஆன்லைன்' மூலம் எஸ்எஸ்சி தேர்வு நடத்தி 60 சதவீத இடங்களை நிரப்பலாம். மீதமுள்ள 20 சதவீத இடங்களை எல்லைப்புற மாவட்டங்களிலும், அடுத்த 20 சதவீத இடங்களை இடதுசாரிப் பிரிவினைவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களிலும் தேர்வெழுதுவோரிடம் விண்ணப்பம் பெற்று தேர்வு நடத்தலாம். இதில், முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி இடங்களை நிரப்பலாம்' என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

தேசிய அளவிலான தேர்வு, தொழில்நுட்ப முறை தொடர்பான பரிந்துரையில் "எஸ்எஸ்சி தேர்வை தாமதமின்றி ஆன்லைனில் நடத்த வேண்டும். யுபிஎஸ்சி தேர்வெழுதுவோர் முதல் முறையாகத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் அவர்களின் விவரங்களைப் பதிவு செய்வது போல, எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதும் தேர்வெழுதுவோர் ஆன்லைனில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதிலிருந்து வடகிழக்கு மாநிலங்கள், எல்லைகளில் தொலைத்தொடர்பு, இணையவசதி இல்லாத பகுதிகளில் இருந்து தேர்வெழுத விண்ணப்பிப்போருக்கு மட்டும் விலக்கு அளிக்கலாம். எஸ்எஸ்சி தேர்வுக்கு "மொபைல் அப்ளிகேஷன்' மூலம் விண்ணப்பிக்கவும் அனுமதிக்கலாம்' என்று நிபுணர் குழு கூறியுள்ளது.

ஆனால், இப்பரிந்துரை தற்போதைக்கு நடைமுறை சாத்தியமில்லை என்று மத்திய ஆயுதப்படைகளுக்கான செயல் நடவடிக்கை குழு கருத்துத் தெரிவித்துள்ளது. மற்றொரு பரிந்துரையில், "வினாத்தாள் கட்டுப்பாட்டை முழுமையாக எஸ்எஸ்சி நேரடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பல்வேறு வகைகளில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, அதை வெவ்வேறு மையங்களுக்கு கலவை முறையில் அனுப்ப வேண்டும். தவறான பதில் அளிப்போருக்கு "மதிப்பெண் குறைப்பு' நடவடிக்கை கட்டாயமாக்கப்பட வேண்டும்' என்று நிபுணர் குழு கூறியுள்ளது.

இராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் உள்ள சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட அரண்மனை பற்றிய தினத்தந்தி செய்தி


மனம் விட்டுப் பேசுங்கள் - டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

பெற்றோர்களுக்கும் வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்கும் இடையேயான அன்பான உறவுதான் குடும்பத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை. பல்வேறு விதமாக ஆத்மார்த்தமாக இந்த அன்பு வெளிப்படும். நல்ல பேச்சின் மூலமாக வெளிப்பட்டால் அது உறவுக்கு ஒரு பலம்தான்.
சில குடும்பங்களில் வரும் பல பிரச்சினைகளுக்குக் காரணம் பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசாமல் இருப்பதுதான். 

நண்பர்களாக…
 
நண்பன் திரைப்படத்தில் ஒரு காட்சி. மூன்று மாணவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். அதில் ஒருவர் சிறந்த புகைப்பட நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுவார். ஆனால் அவரின் அப்பா அவரை இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்திருப்பார். அவரும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இன்ஜினீயரிங் படிப்பார். ஆனால் அவர் நண்பர்கள் அவரை ஊக்குவித்து அவருக்குப் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவார்கள். பெற்றோரிடம் பேசி அனுமதி வாங்கிவர அனுப்புவார்கள். அப்பாவும் மகனும் சந்திக்கும் காட்சியில் மகனுக்கு இன்ஜினீயராக வேலை கிடைத்து விட்டது என்று அப்பா லேப்டாப் வாங்கி வைத்திருப்பார். 

மகன் மெதுவாகத் தன் ஆசையைத் தெளிவுபடுத்துவார். அப்பா முதலில் மறுப்பார். கடைசியில் மாணவர் மண்டியிட்டுச் சொல்வார் ‘’அப்பா, நான் இன்ஜினீயராக ஆகினால் நிறையச் சம்பாதிப்பேன். உங்களுக்கு நிறைய நல்லது செய்வேன். ஆனால் சந்தோஷமாக இருப்பேனா என்பது சந்தேகம். ஆனால் புகைப்பட நிபுணராக இருந்தால் குறைவாகத்தான் சம்பாதிப்பேன். ஆனால் சந்தோஷமாக இருப்பேன் என்று நெகிழ்ந்து கூறுவார். அப்பாவும் மனம் மாறித் தான் வாங்கி வைத்திருந்த லேப்டாப்பை விற்றுவிடுகிறேன். கேமரா என்ன விலை என்று கேட்பார். அப்பாவும் மகனும் கட்டிப்பிடித்துச் சந்தோஷப்படுவார்கள். 

பேசுங்கள்
 
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால் உண்மையில் தேவையான முடிவுகளை எடுக்க முடியாது. அப்பா கோபப்படுவார். நம் முடிவை மாற்றிக்கொள்ளலாம் என்று பிள்ளைகள் நினைப்பார்கள். நாம் ஏதாவது சொன்னால் பையன் கஷ்டப்படுவான் என்று நினைத்து அவன் போக்கிலேயே விட்டுவிடலாம் என்று பெற்றோர்கள் நினைப்பார்கள். இவ்வாறு நினைப்பது தவறானது. இருதரப்பினரின் பேச்சுகளிலும் சுயசிந்தனை வெளிப்படவேண்டும். 

“என் அப்பா அவரது நண்பர் சொன்னாத்தான் கேட்பார்’’ என்று பிள்ளைகள் சிந்திக்கக் கூடாது. “நம் பையனிடம் அவனின் ஆசிரியரை வைத்துப் புத்தி சொல்லலாம்’’ என்று பெற்றோர்கள் நினைக்கக் கூடாது. குடும்ப உறவில் மற்றவர் செல்வாக்கு செலுத்துவதை கூடுமானவரையில் தவிர்ப்பது நல்லது. பெற்றோர்கள் தாங்கள் வாழ்ந்த சூழலும் பிள்ளைகள் இப்போது வாழும் சூழலும் வேறுவேறு என்பதைப் புரிந்துகொண்டு பேசவேண்டும். 

குறிப்பாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்படிப் பேசுவது என்று புரிந்துகொள்வதைக் காட்டிலும் இளைஞர்கள் தங்கள் பெற்றோர்களிடம் எப்படிப் பேசவேண்டும் என்று தெரிந்து கொண்டால் தெளிவு பிறந்து விடும். 

# பெற்றோர்களிடம் இளைஞர்கள் நண்பர்களாகப் பழகுங்கள். அப்போதுதான் அவர்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள். 

# அன்றாடம் பள்ளியில், கல்லூரியில் என்ன நடந்தது என்பதை அவர்களிடம் சொல்லுங்கள். 

# முடிவுகளை நீங்கள் முன்பே தீர்மானித்துவிட்டு பேசாதீர்கள் .அவர்களின் எண்ணங்களுக்கும் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் தருவதுபோல் உங்கள் பேச்சு அமையட்டும். 

# பேச்சுக்களின் நடுவே சுவாரஸ்யத்தை ஏற்படுத்த சிரிப்புகளைச் சிதறவிடுங்கள். 

# அவர்களின் பேச்சு தவறு என்பதைச் சுட்டிக்காட்டாமல் இதை இப்படிப் பேசினால் நன்றாக இருக்கும் என்று சொல்லுங்கள் 

# உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசுங்கள். அவசரப்பட்டுக் கோபமாகப் பேசிவிடாதீர்கள். கோபம் கூட அவர்கள் மேல் உள்ள அக்கறைதான் என்பதைத் தெளிவுபடுத்துங்கள் 

# வெறும் வாய்ப்பேச்சாக மட்டும் இருந்து விடாமல் உங்கள் பாடி லேங்குவேஜ் மூலமாகவும் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள் 

# உங்கள் பெற்றோரை வேறு யாரோடும் ஒப்பிட்டு விமர்சிக்காதீர்கள். 

# படிக்காத பெற்றோர்களுக்கு நீங்கள் படிக்கும் டெக்னாலஜியோ நண்பர்களின் சூழலோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் அறியாமையை அலட்சியப்படுத்தி விடாதீர்கள். 

# அவர்கள் உங்களைவிட வயதானவர்கள்.அனுபவம் மிக்கவர்கள். உங்கள் நலனில் அக்கறை உடையவர்கள் என்ற உள்ளுணர்வோடு உங்கள் பேச்சு அமையட்டும். 

மனம் விட்டுப்பேசுங்கள். அன்பு என்பது ஒருவழிப் பாதையல்ல. நல்ல தொடர்புடைய பேச்சு இருந்தால் இரு தரப்புக்கும் வெற்றி தான்.

அறிவு இப்படியும் இருக்க முடியும் - ம.சுசித்ரா - தி இந்து

ஆனந்தி எப்பப்பார்த்தாலும் கையில் ரூபிக் கியூபைச் சுழற்றி சுழற்றி விளையாடிக்கொண்டே இருப்பாள். பல வண்ணங்களில் இருக்கும் அந்தக் கியூபை ஆறு புறங்களிலும் சுழற்றி, எப்படிக் கலைத்துப்போட்டாலும், சில நிமிடங்களில் ஒரு பக்கம் முழுவதும் ஒரு வண்ணம் வரும்படி எல்லாக் கோணங்களிலும் அடுக்கிவிடுவாள். நான் பல முறை முயன்றும் என்னால் அந்தக் கியூபை அடுக்க முடியவில்லை. அதே போல அவள் செஸ் விளையாட்டை அபாரமாக விளையாடுவாள். மிகவும் நிதானமாக யோசித்த பின்பே காயின்களை நகர்த்துவாள். ஆனால் பத்து நகர்விலேயே ‘செக் அண்ட் மேட்’ செய்து ஆட்டத்தை வென்றுவிடுவாள். 

பள்ளியைப் பொருத்தவரை ஆனந்தி சராசரியான மதிப்பெண்கள் பெறும் மாணவிதான். செஸ், ரூபிக் கியூப் போன்ற வித்தியாசமான விளையாட்டுகளை மிகவும் சாமர்த்தியமாக விளையாடி வெல்கிறாள்.ஆனால் ஏன் படிப்பில் முதல் மாணவியாக வரமுடியவில்லை என்று எனக்குத் தோன்றும். 

அப்படியல்ல இப்படி!
 
ஆனால் அந்தக் கேள்வியே தவறு என்பது சமீபத்தில் புரிந்தது. செஸ்ஸில் வெல்லும் ஆனந்தி ஏன் படிப்பில் தோற்கிறாள் என்ற கேள்வி படிப்பை மையமாக வைத்து இருக்கிறது. எப்படியாவது அந்தக் குழந்தை படித்துவிட வேண்டுமே என்னும் ஆதங்கம்தான் அதில் வெளிப்படுகிறது. ஆனால் அந்தக் கேள்வியைப் புரட்டிப் பார்ப்போம். ‘படிப்பில் சராசரியாக விளங்கும் ஆனந்தியை செஸ், ரூபிக் கியூப் விளையாட்டுகளில் வெற்றி பெற வைப்பது எது?’ இப்படிச் சிந்திக்கத் துவங்கினால் ஆனந்தியின் பலத்தை, தனித்துவத்தைப் புரிந்துகொண்டு அவளது ஆற்றலை வளர்த்தெடுக்க முடியும் இல்லையா! 

மனதில் காட்சியாக…
 
உலகை முப்பரிமாணங்களில் காட்சிப்படுத்திப் பார்க்கும் திறன் சிலரிடம் இருக்கும். இவர்கள் வெறுமனே பார்ப்பதோடு நின்றுவிடாமல் மனக்கண்ணில் காட்சி ரீதியாக முன்னோக்கி சிந்தித்துச் செயல்படுவார்கள். ஒரு பொருள் மற்றொரு பொருளோடு இணைந்தால் அதன் வடிவம் எப்படி மாறும் என்பதை நுணுக்கமாகவும் நுட்பமாகவும் மனதில் படமாகக் கணிப்பார்கள். ஏதோ புலன்களுக்குப் புலப்படாத அமானுஷ்யமான சக்தியைப் பற்றிப் பேசுவது போலத் தோன்றலாம். ஆனால் இது அறிவுபூர்வமானது, அறிவியல் அடிப்படையிலானது. இதுதான் காட்சி ரீதியான அறிவுத்திறன் என்கிறார் உளவியல் நிபுணர் கார்டனர். இப்படிப்பட்ட அறிவுத் திறன் கொண்டவர்களால் புதிய உலகை படைக்க முடியும். 

காட்சி ரீதியாகப் படைப்பது என்றால், ஓவியம் தீட்டுவது, புகைப்படம் எடுப்பது, திரைப்படம் உருவாக்குவது என்பவை மட்டுமல்ல. காட்சி ரீதியான அறிவுத் திறனில் மிளிர்பவர்கள் நம்மால் யூகிக்க முடியாதத் துறைகளைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். 

உலகின் தலை சிறந்த இயற்பியலாளர்களில் ஒருவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் டவரின் வடிவத்தை முதலில் வரைந்த கட்டிடக்கலை நிபுணர் மாரிஸ் கோச்லின்.இத்தகையோரிடம் காணப்பட்ட அறிவுத்திறன்களில் மேலோங்கி இருந்தது காட்சி ரீதியான அறிவுத்திறன்தான். 

அது எப்படி விஞ்ஞானிக்கும், கட்டிடக்கலை நிபுணருக்கும், விளையாட்டு வீரருக்கும், புகைப்படக் கலைஞருக்கும், ஓவியருக்கும் ஒரே விதமான அறிவுத் திறன் இருக்க முடியும் என்கிறீர்களா? அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களே அதற்கு பதில். 

ஒளி பாயுதே
 
E = MC2 என்ற கூற்று 1905-ல் இயற்பியல் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியது. அந்த கூற்றின் அடிப்படையான சிறப்புச் சார்புக் கோட்பாட்டைக் கண்டறிந்தபோது ஐன்ஸ்டீனுக்கு 26 வயது. மூன்று வயதுவரை ஐன்ஸ்டீன் பேச்சாற்றல் இல்லாத குழந்தையாக இருந்தார். அவர் பள்ளியில் எடுத்த அதிகப்படியான மதிப்பெண் நூற்றுக்கு ஐம்பதுதான். சிறு வயது முதல் இசை கேட்டு ரசிப்பதும் வயலின் இசைப்பதும் ஐன்ஸ்டீனுக்கு பிடித்தமான விஷயங்கள். 

ஐன்ஸ்டீனின் வீட்டுக்கு வந்து டியூஷன் மாஸ்டர் கணிதம் மற்றும் தத்துவத்தைக் கற்பித்தார். அவர் ஒரு நாள் ஐன்ஸ்டீனிடம் குழந்தைகளுக்கான அறிவியல் புத்தகம் ஒன்றைத் தந்தார். அதில் “மின்சாரக் கம்பத்துக்குள் மின்சாரம் பாயும் வழி எங்கும் நாமும் ஓடினால் எப்படி இருக்கும்?” என எழுதியிருந்தது. அதைப் படித்தவுடன் ஐன்ஸ்டீனின் அறிவியல் கற்பனைகள் விரியத் தொடங்கின. 

“ஒளி என்பது அலையாக இருந்தால் அது உறைந்த நிலையில்தான் காட்சி அளிக்கும். ஆனால் ஒளி பாய்கிறதே. இது அணு பற்றிய கருத்தியலுக்குப் புறம்பானதே” என மனதில் சினிமாவாக ஒளியின் ஓட்டத்தைக் காணத் தொடங்கினார். அன்று தோன்றியக் காட்சியை 10 வருடங்களாக அசைபோட்டதன் விளைவே சிறப்புச் சார்புக் கோட்பாடு. 

வான் உயர!
 
காஸ்டேவ் ஈஃபில் எனும் பொறியாளர்தான் ஈஃபில் டவரைக் கட்டியவர். அவர் பெயர்தான் ஈஃபில் டவருக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு அவரைப் பற்றிப் பேசாமல் ஏன் அதன் கட்டிடக்கலை நிபுணரை பற்றி பேசுகிறோம்? அதற்குக் காரணம், 1063 அடி உயரத்தில் பாரீஸ் நகரின் மிக உயரமானக் கட்டிடமாக விளங்கும் ஈஃபில் டவரைத் தன் மனக்கண்ணில் முதன்முதலில் கற்பனை செய்துப் பார்த்தவர் அதன் கட்டிடக்கலை நிபுணர்களில் ஒருவரான மாரிஸ் கோச்லின். 

பாரீஸ் நகரின் மையத்தில் அனைவரையும் வரவேற்கும் விதமாக ஒரு பிரம்மாண்டமானக் கட்டிடத்தை எழுப்பினால் எப்படி இருக்கும் என முதன் முதலில் கற்பனை செய்துப் பார்த்தவர் அவர் தான். அப்படியொரு பிரம்மாண்டமானக் கட்டுமானத்தை மனிதர்களால் உருவாக்க முடியும் என அன்று வரை யாரும் கற்பனை செய்துப் பார்க்கவில்லை. வெற்றிடத்தில் வானுயர கட்டுமானத்தை ஒருவரால் மனக்கண்ணில் காட்சிப்படுத்திப் பார்க்க முடியுமென்றால் காட்சி ரீதியான அறிவுத் திறனுக்கு அதைவிடவும் சிறந்த உதாரணம் வேண்டுமா என்ன? 

விஞ்ஞானிக்கும், கட்டிடக்கலை நிபுணருக்கும் இருப்பது கணிதத் திறன் என்பது பொதுவான நம்பிக்கை. நம் கல்வித் திட்டமும் அந்த அடிப்படையில்தான் செயல்பட்டுவருகிறது. ஆனால் உளவியல் வரலாறு வேறுவிதமான உண்மைகளைத் தன்னுள் வைத்திருக் கிறது. அதைப் புரிந்துகொள்ளத் துவங்கினால் தனி மனிதரையும், ஒட்டுமொத்த உலகையும் புதிதாகப் பார்க்கத் தொடங்குவோம் அல்லவா!

நிகழ்காலத்தை நிந்திப்பது நியாயமல்ல - டாக்டர். ஆர்.கார்த்திகேயன் - தி இந்து

இப்போதெல்லாம் 40 வயதுக்காரர்களே சலித்துப் போய்ப் பழைய கதையை ஆரம்பித்துவிடுகிறார்கள். 60 வயதைத் தாண்டியவர்கள்தான் முன்பு ‘‘அந்தக் காலத்துல ...’’என்று ஆரம்பிப்பார்கள். 

கடந்த சொர்க்கம்
 
“முன்னெல்லாம் வேலைன்னா ஒரு மரியாதை. கம்பெனின்னா ஒரு விசுவாசம் இருக்கும். இப்பெல்லாம் எங்கே சார்?” 

“எல்லாம் மொபைல பிடிச்சிட்டு உக்காந்திடுறாங்க. இந்த டெக்னாலஜி வந்து எல்லாத்தையும் கெடுத்துடுச்சு!” 

இதுபோலப் பணியிடத்தில் நிறைய குரல்கள் கேட்கும். கடந்த காலம் சொர்க்கம். நிகழ்காலம் நரகம். நல்லவை எல்லாம் போய்விட்டன. இவைதான் சாராம்சம். 

லெட்டரில் காதல்
 
ஒரு தொழிற்சாலையின் முதுநிலை மேலாளருடன் பேசிக்கொண்டிருந்தேன். புதிதாய்ச் சேர்ந்தவர்கள் நிலைப்பதில்லை என்று புலம்பிக்கொண்டிருந்தார். “எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடைய மாட்டார்கள்!” என்று முடித்தார். 

பிறகு, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் சில இளைஞர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எது செஞ்சாலும் பழைய கதையையே பேசிக்கொண்டிருந்தால் சீக்கிரம் வெறுப்பு வருது!” என்றார்கள். 

ஒரு காதல் கடிதத்தை இன்லேண்டு லெட்டரில் எழுதி அனுப்பி அடுத்த வாரம் வரை பதிலுக்குக் காத்திருப்பது அந்தக் கால மனிதர்களுக்குச் சுகம்தான். ஆனால் இன்று, அந்த அந்த வினாடியிலேயே உடனடியாக இமெயில், செல்போனில் இளைஞர்கள் காதல் அரட்டை அடித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இன்லாண்ட் லெட்டர் காதல் புரிவது சிரமம். 

அதே போல சைக்கிளில் குரங்குப் பெடல் அடித்து, ஓட்டியவர்களின் அனுபவத்தை இந்தக் காலத்தினருக்குப் புரிய வைப்பது சிரமம். பலவகையான வேகங்களில் பறக்கும் வாகனங்களையும் ஓட்டிப் பார்த்த சலிப்பு இன்றைய தலைமுறையினரிடம் தெரிகிறது. சட்டை கிழியும் நெரிசலில் சினிமா டிக்கெட் வாங்கிய தலைமுறை அது. சீட் நம்பர் பார்த்து ஆன்லைனில் டிக்கெட்டும், பாப்கார்னும் ஆர்டர் செய்யும் தலைமுறை இது. 

காலச் சுழற்சி
 
பழைய வாழ்க்கையை இன்று திரும்பிப் பார்த்து ரசித்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், மீண்டும் அதை வாழச் சொன்னால் முடியுமா? கண்டிப்பாக இயலாது. தொழில்நுட்பமும் காலச் சுழற்சியும் பல வசதிகளை வயது வித்தியாசம் பார்க்காமல் மனிதர்களுக்குச் செய்து கொடுத்துவிட்டன. 

ரயில் கட்டணத்துக்காக மணிக்கணக்கில் காத்து நின்ற பெரியவர்கள் இன்று ஆன்லைனில் ரயில் டிக்கெட் பதிவு செய்கிறார்கள். சாலையில் ஓடிஓடி ஆட்டோ தேடியவர்கள் இன்று போனில் டிரைவரிடம் வழி சொல்லிவிட்டு நிம்மதியாகக் காத்திருக்கிறார்கள். 

ரோபோக்களை வைத்து வைத்தியம் செய்யும் அளவு வந்துவிட்டது. மின் விசிறியைப் பார்த்துப் பார்த்து அணைத்தவர்கள் இன்று குற்ற உணர்ச்சியில்லாமல் ஏ.சி. போட்டுவிட்டு அந்தப் பக்கம் நகர்கிறார்கள். பொருளாதார சுபிட்சம் புதிய வாழ்க்கை முறைகளுக்கு இவர்களைக் கடத்திச் சென்றிருக்கிறது. 

அதையெல்லாம் அனுபவித்துக்கொண்டே பழையதைப் போற்றுகிறேன் என்று நிகழ் காலத்தை நிந்திப்பது நியாயமல்ல. இன்றைய வாழ்க்கை முறை வேண்டும். ஆனால் அதற்குத் தரும் விலைகள் மனதுக்கு உகந்ததாக இல்லை. இதுதான் பிரச்சினை. 

விமர்சிக்கலாமா?
 
ஆனால், கடந்த காலத்தைப் பார்க்காத இக்காலத்தினரிடம் அவர்கள் வாழ்க்கை முறையை விமர்சிப்பது அவர்களிடமிருந்து உங்களை அன்னியப்படுத்தும். நாம் மாறிய வேகம் நமக்கே பிடிபடாதபோது, அவர்கள் எப்படி இதை உணர முடியும்? 

பெண்ணிடம் காதலைச் சொல்ல முடியாமல் படம் முழுதும் ஏழு பாட்டுப் பாடி, தாடி வளர்த்து, ஒரு தலை ராகம் திரைப்படத்தின் கதாநாயகன் செத்துப் போவான். அந்தக் கதை நிச்சயம் இந்தக் கால மனிதர்களுக்குப் புரியாது. அதே போலச் செல்வராகவன் திரைப்படங்களை வயதானவர்கள் உத்தரவாதமாக வெறுப்பதற்கு அந்த உலகம் புரியாததுதான் காரணம். 

நமது பங்கு
 
பணியிடத்தில் வயதானவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்களின் பிழைகளை அவர்கள் வயதை வைத்துத் திட்டாதீர்கள். காரணம், அவர்களின் உலகைக் கட்டமைத்ததில் நமக்குப் பெரும் பங்கு உண்டு. 

சிறை வாழ்க்கைகூட 20 வருடங்கள் கழித்துத் திரும்ப யோசித்தால் சிலிர்ப்புடன்தான் யோசிக்க வைக்கும். அது மனதின் தன்மை. 

“அன்னிக்கு கையில ஒரு பைசா இல்லை. ஆனால் அவ்வளவு சந்தோஷம் இருந்தது!” என்று சொல்ல முடிவது இன்று நீங்கள் சம்பாதித்து முன்னேறியதால். 30 வருடங்களாகக் கையில் காசில்லாமல் வாழ்ந்திருந்தால் இப்படி நினைத்துச் சிலிர்க்க முடியுமா? 

இன்றுள்ள தலைமுறை பெற்ற வசதிகள் நாம் அவர்களுக்குப் பெற்றுத் தந்தவை. அதன் அருமையை அவர்கள் உணரத் தேவையில்லை. காரணம், நமக்கு முன்னே சென்ற தலைமுறைகளின் உழைப்பை நாம் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கிறோமா? இல்லையே! 

ஏமாற்றங்களா?
 
உங்களுக்குக் கீழே உள்ள பணியாளர்கள் செய்யும் பிழைகளை வெறும் பிழைகளாக மட்டும் சுட்டிக் காட்டுங்கள். தலைமுறையை இணைத்து அவர்களைச் சாட வேண்டாம். அவர்கள் உலகைப் புரிந்துகொள்ளுங்கள். காரணம், அந்த உலகம் அமைய வாழ்க்கை முழுதும் பணியாற்றியவர்கள் நாம். 

வேகமாகச் சுழலும் வாழ்வில் பெரும் மாற்றங்களைச் சந்தித்தது உங்களது பாக்கியம். அந்த மாற்றங்களை ஏமாற்றங்களாகப் பார்க்காமல் அனுபவங்களாகப் பார்த்தால் எந்த வேலையும் இனிக்கும். எந்த வயதுப் பணியாளருடனும் மகிழ்ச்சியுடன் பணி புரிய முடியும்!

மாத வாரியாக 2015 க்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாள்கள் (RH) விவரம்

RH LIST - 2015


JANUARY

1(Thu)- Vaigunda Egadesi
5(Mon)-Arudthra Darisanam
14(Wed)-Bohi
31(Sat)-Giarveen Mugaideen Abdul Kadhar 
 
FEBRUARY 3(Tue)-Thaipoosam
17(Tue)-Maha Sivarathiri
18(Wed)-Sambal Budhan


MARCH

4(Wed)-Masi magam

APRIL

2(Thu)-Periya Viyalan

JUNE

2(Tue)-Shabe Bharath
19(Fri)-Ramzan First day


JULY

14(Tue)-Shabe kadar

AUGUST

3(Mon)-Adi perukku
28(Fri)-Onam
29(Sat)Rig ubakarma


SEPTEMBER

17(Thu)-Sama Ubakarma
23(Wed)-Arpha


OCTOBER

15(Thu)Hajri New year

NOVEMBER

2(Mon)Kallarai thirunal
10(Tue)Diwali Nonbu
25(Wed)Karthigai Deepam


DECEMBER

24(Thu)Christmas Eve
26(Sat)Aruthra Dharisanam
31(Thu)New year Eve

ஐ லவ் யூவா, ஐ எம் லவ்விங் யூவா? - ஜி.எஸ்.சுப்ரமணியன் - தி இந்து

ஒரு வாசகர் “I play cricket” என்பதற்கும் “I am playing cricket” என்பதற்கும் அர்த்தத்தில் என்ன வித்தியாசம் என்று கேட்டிருக்கிறார். இதற்கான விளக்கம் வேறு பல தவறுகளைக்கூடச் சரி செய்யும் வாய்ப்பை அளிக்கக் கூடும். 

“I play cricket” என்பது present tense. (சிலர் இதை simple present tense என்றும் கூறுவார்கள்). 

“I am playing cricket” என்பது present continuous tense. 

இரண்டு வாக்கியங்களும் வெவ்வேறு அர்த்தம் கொண்டவை. “I am playing cricket” என்று நீங்கள் சொன்னால் கிரிக்கெட் மட்டையும் கையுமாக (அல்லது கிரிக்கெட் பந்தும் கையுமாக) அதைச் சொல்கிறீர்கள் என்று அர்த்தம். அதாவது இதைச் சொல்லும் நொடியில் நீங்கள் அந்தச் செயலைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். 

“I play cricket” என்றால் நீங்கள் கிரிக்கெட் ஆடும் பழக்கம் கொண்டவர் என்று அர்த்தம், அவ்வளவுதான். 

இதையே வேறு மாதிரிச் சொல்லலாம். “I am living in London” என்றால் நீங்கள் இப்போதும் அங்கு வசிக்கிறீர்கள், அங்கிருந்தபடி இதைச் சொல்கிறீர்கள். 

“I live in London” என்று நீங்கள் லண்டனிலிருந்து இந்தியாவுக்கு விடுமுறைக்கு வரும்போதுகூடக் கூறலாம். 

பொதுவாக (மேற்படி குழப்பம் வேண்டாமே என்பதற்காகவோ என்னவோ) present tense verbக்கு முன்பாக always, often போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். கீழே உள்ள வாக்கியங்களை நன்கு கவனியுங்கள். 

He always likes her presence. 

Malathi frequently visits her home town. 

He often comes with us here. 

It occasionally rains in summer. 

I rarely ask for help. 

We never visit this hospital. 

Present continuous tense என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பதற்கும் நாம் சில கூடுதல் வார்த்தைகளைப் பயன்படுத்துவ துண்டு. இதோ சில உதாரணங்கள். 

What are you doing now? 

I think you are eating a lot nowadays. 

I am speaking to you, at the moment. 

வருங்காலத்தில் விரைவிலேயே நடக்கவிருப்பதைக் குறிக்கும்போதும் Present continuous tense ஐப் பயன் படுத்தலாம்.

இரண்டு உதாரணங்கள் இதோ.

I am going to a movie tonight. My uncle is arriving tomorrow. 

Amoral – Immoral – Immortal 

Moral என்பது ஒழுக்கநெறி தொடர்பான ஒரு வார்த்தை. Moral story என்றால் அந்தக் கதையில் ஒழுக்கம் போதிக்கப்படுகிறது என்று அர்த்தம். 

அதற்காக amoral என்றால் அதற்கு எதிர்ச்சொல் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. ஒழுக்கநெறிக்குத் தொடர்பில்லாதது (எதிரானது அல்ல) என்று கூறலாம். 

Mathematics is an amoral subject. 

ஆனால், immoral என்பது, moral என்பதன் எதிர்ச்சொல். Cheating, stealing, lying are immoral acts. 

Moral என்பது வேறு. Mortal என்பது வேறு. Mortal என்றால் இறப்பு நேரக்கூடிய என்று அர்த்தம். Immortal என்றால் இறப்பில்லாதது என்று அர்த்தம். All human beings are mortal. No one is immortal. 

இரு ஆங்கில இதழ்களின் பெயர்கள் குறித்து ஒரு சந்தேகம் வந்திருக்கிறது ஒரு வாசகருக்கு. 

“அது ஏன் Readers’ Digest? அப்படியானால் எதற்கு Women’s Era?’’ என்று ரத்னச் சுருக்கமாகக் கேட்டிருக்கிறார். 

Readers என்பது பன்மை. அதனால் அதற்குப் பிறகு apostrophe வந்திருக்கிறது. (Reader என்பதற்குப் பிறகு அந்த நிறுத்தக் குறி வந்திருந்தால், அது ஏதோ ஒரு வாசகருக்கானது என்றாகிவிடும்). Women என்பதே பன்மை என்பதனால், அதைத் தொடர்ந்து அந்த நிறுத்தக் குறி இடம்பெற்றிருக்கிறது. 

Parents’ Day. Valentine’s Day. இந்த இரண்டையும் கவனித்துப் பார்த்தால் நான் சொல்ல வந்தது மேலும் தெளிவாகவே விளங்கும்.

உதவி கிடைச்சா பயப்படுவாங்களா? - ஜி.எஸ்.சுப்ரமணியன் - தி இந்து

    ஒரு வாசகர் “தவறு இழைக்கும் நாடுகளுக்கு எதிராக economic sanctions-ஐ பிற நாடுகள் செயல்படுத்த வேண்டும் என்கிறார்களே. இது அந்த நாடுகளுக்கு நல்லதுதானே. எனக்குப் புரியவில்லை’’ என்று ஆச்சரியப்படுகிறார். 

   ஆச்சரியம் வேண்டாம் நண்பரே. இது ஒன்றும் “இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’’ வகையான ஆலோசனை அல்ல. Sanction என்பதற்கும், sanctions என்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. 

அனுமதியும் தடையும்
 
Sanction என்றால் அனுமதித்தல். I hereby sanction you the ten days leave requested என்பதுபோல. இதே அர்த்தத்தில் அதன் பன்மையாகவும் சில சமயம் sanctions என்பது பயன்படுத்தப்படுவது உண்டு. 

ஆனால் sanctions என்பதற்கு மற்றொரு முக்கிய அர்த்தம் உண்டு. சட்டத்தையோ, நல்லொழுக்கத்தையோ பின்பற்றாதவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையையும் அப்படிச் சொல்வதுண்டு. அதாவது penalty, deterrent என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். ஒரு நாட்டின் மீது பிற நாடுகள் economic sanctions-ஐ விதிக்கின்றன என்றால் அந்த நாட்டுடனான வணிக உறவுகளைத் துண்டித்துக் கொள்கின்றன என்று அர்த்தம். இதனால் அந்த நாட்டுக்குப் பொருளாதார இழப்பு. அரசியல்ரீதியான எதிர்ப்பைச் சமாளிக்கும் நாடுகள்கூட பிற நாடுகளின் economic sanctions-ஐ சமாளிப்பது கஷ்டம். 

பாதிப்பும் நஷ்டஈடும்
 
இதுபோலத்தான் Damage, Damages ஆகிய வார்த்தைகளுக்கிடையே உள்ள வேறுபாடு. Damage என்றால் பாதிப்பு. The property was damaged by the cyclone. சில சமயம் இதைப் பன்மையில் damages என்று குறிப்பிடுவதுண்டு.
ஆனால் damages என்றால் நஷ்டஈடு என்பது பொதுவான அர்த்தம். ஒரு நீதிபதி “I hereby order Mr.X to pay Mr.Y damages of Rupees one lakh” என்று கூறலாம். ஆக S சேர்த்ததில் அர்த்தமே மாறிவிட்டது. 

இது CARDIOLOGY பிரிவு!
 
ஆங்கில நாவல் ஒன்றில் “Set the heart at rest’’ என்று ஒரு நண்பர் படித்தாராம். “இதற்கு அர்த்தம் என்ன?’’ என்று கேட்டுள்ளார். இது கொலை அல்லது தற்கொலையைக் குறிக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார். உடனடியாக I should set his heart at rest. பதற்றம் வேண்டாம் நண்பரே. 

கவலையில்லாமல் (அதாவது கவலையைப் போக்கும் விதத்தில்) செய்வதுதான் “setting the heart at rest’’. This letter will set your heart at rest. 

இதயம் தொடர்பான வேறு பல சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது. 

“The house was after my heart’’ என்றால் எனக்கு எது போன்ற வீடு வேண்டுமென்று நினைத்தேனோ, அது போலவே இருக்கிறது என்று அர்த்தம். 

The death of my uncle broke my heart என்றால் தாங்க முடியாத துயரத்தை அந்த இறப்பு அளித்தது என்று அர்த்தம். 

From the bottom of my heart என்றால் மிகவும் உண்மையாக என்று பொருள். I thank everyone from the bottom of my heart. 

Heart of hearts என்றால் மனதின் ஆழத்தில் என்று அர்த்தம். In my heart of hearts, I consider this death to be a murder. 

Have one’s heart in one’s boots என்றால் மிகவும் கவலையுடன் இருப்பது. அதாவது depressed. 

Embrace - Embarrass 

Embrace என்றால் தழுவுதல். 

I embraced my friend after he won the tournament. 

தழுவுதல் என்பதை உருவகமாகவும் பயன்படுத்துவதுண்டு. 

அம்பேத்கார் புத்த மதத்தைத் தழுவினார் என்பதை Ambedkar embraced Buddism எனலாம். 

Embarrass என்பது ஒருவிதச் சங்கட உணர்ச்சியைக் குறிக்கிறது. அதாவது தற்செயலாக நடந்துவிடும் ஒன்று. மீதி பேருக்கு இது தெரியாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கக் கூடிய ஒன்று. இதன் மூலம் கொஞ்சம் அவமானம் நேரலாம் எனும்படியான விஷயம். 

He felt embarrassed, upon falling down on this stage before a huge audience. Never feel embarrassed to admit your weaknesses. 

இந்த வார்த்தைகளின் வித்தியாசத்தைப் புரிந்துகொண்டவர்கள் “நீ என்னைச் சங்கடப்படுத்துகிறாய்’’ என்று காதலி ஆங்கிலத்தில் கூறும்போது, கைகளை முன்புறம் விரித்தபடி பரவசத்துடன் அவளை நோக்கி முன்னேற மாட்டார்கள்.